01st November 2018 16:58:56 Hours
இலங்கை இராணுவத்தின் 2 ஆவது கஜபா படையணியின் ஆண்டு நிறைவு விழா திருகோணமலையில் அமைந்துள்ள 2 ஆவது கஜபா படைத் தலைமையகத்தில் (26) ஆம் திகதி இடம் பெற்றது.
இந்த நிகழ்வின் போது இந்த கஜபா படையணியின் முன்னாள் கெப்டன் ரவி பகலவத்த அவர்களின் அனுசரனையில் சக்கர நாற்காலிகள், ஊன்றுகோள்கள் படையினருக்கு நன்கொடையாக அன்பளிப்பு செய்யப்பட்டன.
அத்துடன் பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன. இந்த நிகழ்விற்கு 22 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் அநுர ஜயசேகர அவர்கள் பிரதம அதிதியாக வருகை தந்து நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தனர்.
மங்கள விளக்கேற்று நிகழ்வுகள் 22 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மற்றும் 2 ஆவது கஜபா படையணியின் கட்டளை அதிகாரி பந்துள ரத்னாயக அவர்களினால் இடம்பெற்றது.
மேலும் புலமைப்பரிசில் சிறந்த தேர்ச்சி பெற்ற பாடசாலை மாணவர்கள் 50 பேருக்கு இந்த நன்கொடைகள் வழங்கப்பட்டன.
அத்துடன் சமய மதகுரு தலைவர்களின் பங்களிப்புடன் ஆசிர்வாத நிகழ்வுகளும் இடம்பெற்றன. Sports Shoes | Beyonce Ivy Park x adidas Sleek Super 72 ICY PARK White , Where To Buy , GX2769 , Ietp