Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

16th September 2019 16:30:44 Hours

ஆசிரியர் கற்கை ஊக்குவிப்பு செயலமர்வு

மட்டக்களப்பு குரிஞ்சாமுனை பாடசாலை வளாகத்தில் தெகிவல சாந்தி அமைப்பின் அனுசரனையுடன் இம் மாதம் 11 – 13 ஆம் திகதி வரை ஆசிரியர் கற்கை ஊக்குவிப்பு செயலமர்வு இடம்பெற்றது. இந்த செயலமர்வில் 29 ஆசிரியர்களும், 150 மாணவர்களும் இணைந்து கொண்டனர்.

செயலமர்வு இறுதி நாளான 13 ஆம் திகதி கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் F.C ராகல், மட்டக்களப்பு வலய கல்வி பணிப்பாளர திரு எஸ் சிறிதரன், சாந்தி அமைப்பின் நிர்வா பிரதானி திரு சுஜீவ ரத்னாயக, மட்டக்களப்பு கண்ணங்குடா மகாவித்தியாலயத்தின் அதிபர் திரு புலேந்திரகுமார் அவர்களது பங்களிப்புடன் இடம்பெற்றது.

இந்த இறுதி நாள் நிறைவு விழாவிற்கு பிரதம அதிதியாக 23 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் கபில உதுலுபொல அவர்கள் வருகை தந்து சிறப்பித்தார்.

ஆசிரியர் கற்கை ஊக்குவிப்பு செயலமர்வானது 231 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி கேர்ணல் மிஹிந்து பெரேரா அவர்களது வழிக்காட்டலின் கீழ் 4 ஆவது கெமுனு காலாட் படையணியின் பூரண பூரண ஒத்துழைப்புடன் இடம்பெற்றன. Adidas shoes | Gifts for Runners