05th November 2018 15:40:39 Hours
அனுராதபுரத்தில் அமைந்துள்ள போதானா வைத்தியசாலையில் இராணுவத்தினரால் சிறுநீரக பிரிவிற்க்கான அமைக்கப்படுகின்ற விசேட நான்கு மாடிக் கட்டிட பணிகளை பார்வையிடும் நோக்கில் இராணுவத் தளபதியவர்களின் வழிகாட்டலின் கீழ் இராணுவ பிரதி பதவிநிலைப் பிரதானியான மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன அவர்கள் இன்று காலை (05) கலந்து கொண்டு இத் திட்டத்தின் பணிகளை மேற்கொள்ளும் இராணுவ பொறியியலாளர்ப் படையினருடன் கலந்துரையாடினார்.
மேலும் மதிப்பிற்குறிய ஜனாதிபதியவர்களின் தலைமையில் இராணுவ பொறியியலாளர் பிரிவினரால் கட்டமைக்கப்படும் இத் திட்டமானது சிறுநீரக பிரிவிற்க்கான அமைக்கப்படுகின்ற 40 134சதுர அடி கொண்ட கட்டிடமானது சுமார் 98 படுக்கை கட்டில்களை உள்ளடக்கும் வகையில் காணப்படுகின்றது. மேலும் இவற்றிற்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்வதற்காக 28மில்லியன் ருபா மத்திய மாகாண சபைக்கு வழக்கப்பட்டுள்ளது.
இத் திட்டத்தில் இராணுவ பொறியியலாளர்ப் படையின் 33 இராணுவத்தினர் மேற்கொள்வதுடன் தற்போது இக் கட்டுமானப் பணிகள் 80வீதமளவிற்கு நிறைவடைந்துள்ளது. அத்துடன் இத் திட்டமானது மதிப்பிற்குறிய ஜனாதிபதியவர்களின் தலைமையில் 25ஆம் திகதி மார்ச் மாதம் 2016ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன அவர்கள் இக் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் இராணுவ பொறியியலாளர்ப் படையினரை சந்தித்து கலந்துரையாடினார். மேலும் இவர்களது தங்குமிட வசதிகள் போன்றன தொடர்பாகவும் கலந்துரையாடினார். Sneakers Store | Nike SB Dunk High Hawaii , Where To Buy , CZ2232-300 , Worldarchitecturefestival