09th January 2020 15:30:46 Hours
புத்தளையில் அமைந்துள்ள அதிகாரிகள் துறைசார் அபிவிருத்தி நிலையத்தில் “துரு மித்துரு நவ ரடக்” எனும் தொனிப்பொருளுக்கமைய, அதிகாரிகள் துறைசார் அபிவிருத்தி நிலை வளாகத்தில் 06 ஆம் திகதி திங்கட்கிழமை படையினரால் 100 க்கும் மேற்பட்ட மர கன்றுகள் நடும் நிகழ்வு இடம்பெற்றன.
இந்த திட்டமானது அதிகாரிகள் துறைசார் அபிவிருத்தி நிலைய வளாகத்தை பசுமையாக்குவதன் நிமித்தம் அதிகாரிகள் துறைசார் அபிவிருத்தி நிலையத்தின் படையினரால் 500 மீட்டர் தூர அளவிற்கு மர கன்றுகள் நடவுசெய்யப்பட்டனர்.
அதிகாரிகள் துறைசார் அபிவிருத்தி நிலையத்தின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ஜயந்த ஜயவீர, பிரதி கட்டளை தளபதி, தலைமை பயிற்றுவிப்பாளர், கட்டளை தளபதிகள், சிரேஷ்ட பயிற்றுவிப்பாளர்கள்,அதிகாரிகள் மற்றும் படையினர்கள் பலர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். Best Authentic Sneakers | NIKE AIR HUARACHE