17th January 2020 22:51:26 Hours
வடமராச்சி கிழக்கு நாகர்கோவில் பிரதேசத்தில் தைப்பொங்கல் தினத்தன்று மாலை (15) சில வாலிபர்கள் மற்றும் ரோந்து நடவடிக்கைகளை மேற்கொண்ட படையினரிடையே ஏற்பட்ட தகராறு தொடர்பான மேலதிக விசாரணைகளை பருத்தித்துரை பொலிஸார் மற்றும் இராணுவ பொலிஸ் படையணியினர் மேற்கொண்டு வருகின்றனர்.
மேற்படி தகவலிற்கமைய சைக்கில் ரோந்து நடவடிக்கைகளில் புதன்கிழமை (15) மாலை 06.45 மணியளவில் ஈடுபட்ட இராணுவத்தினர் வீதியில் நபரொருவர் மது.
போதையில் வீழ்ந்து கிடப்பதைக் கண்டு அவரது அபாயகரமான சூழ்நிலையை கருத்திற்கொண்டு அந்நபரிற்கு உதவும் முகமாக செயற்பட்டுள்ளனர்.
அவ்வேளை அப்பிரதேசதவாசிகள் அங்கு குழுமியதுடன் மதுபோதையில் காணப்பட்ட நான்கு இளைஞர்களும் சம்பவ இடத்தில் காணப்பட்டதுடன் அவ்விடத்தில் ரோந்து நடவடிக்கைகளை மேற்கொண்ட இராணுவத்தினருக்கு இடையூறு விளைவிக்கும் முகமாகவும் செயற்பட்டுள்ளனர்.
மேற்படி சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்யும் முகமாக பருத்தித்துரை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். affiliate tracking url | Best Nike Air Max Shoes 2021 , Air Max Releases and Deals