Header

Sri Lanka Army

Defender of the Nation

04th December 2019 12:29:00 Hours

யாழ் படையினரால் க.பொ.த. சாதாரண தர மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கு

51 ஆவது படைப் பிரிவு தலைமையகத்தின் சிவில் சமூக திட்டங்ளை மேலும் மேம்படுத்தும் நோக்குடன் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 51 ஆவது படைப் பிரிவு தலைமையகத்தினால் டிசம்பர் மாதம் க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களின் நலன் கருதி நான்கு பிரிவுகளைக் கொண்ட வெவ்வேறான கருத்தரங்குகள் நவம்பர் 25- 27 ஆம் திகதிகளில் எற்பாட்டு செய்யப்பட்டன.

51ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் லலித் ரத்நாயக்க அவர்களினால் முன்மொழியப்பட்ட இக்கருத்தரங்குகளானது, ஸ்கந்தாரோடை வித்தியாலயம்,ஆலவெடி அருநோதய வித்தியாலயம், வேலானை சரஸ்வதி வித்தியாலயம், வட்டுக்கோட்டை யாழ்பாண வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் இடம்பெற்றன.

யாழ் மாவட்ட கல்வித் திணைக்களத்தில் உள்ள பிரபல்யமான ஆசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்களைக் கொண்டு நாடாத்தப்பட்ட இக்கருத்தரங்கில் விஞ்ஞானம், கணிதம், ஆங்கிலம் உள்ளிட்ட பிரதான பாடங்கள் நடாத்தப்பட்டன. மேலும் இக்கருத்தரங்கில் பல சிரேஷ்ட அதிகாரிகள் வெவ்வேறாகக் கலந்து கொண்டனர். Nike footwear | Air Jordan Release Dates 2020