30th November 2019 21:45:16 Hours
இராணுவ உளவியல் பணியகத்தின் வழிக்காட்டலின் கீழ் மருந்து தடுப்பு பிரிவு பணியகத்தின் ஏற்பாட்டில் இராணுவத்தினருக்கு தனிப்பட்ட வாழ்க்கை பிரச்சினைகள் மற்றும் பிற முக்கிய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக அதிகாரி ஆலோசகர்களை உருவாக்குவதற்கான பயிற்சித் திட்டமானது ஆரம்பமானது.
இந்த செயலமர்வானது கிளிநொச்சி மற்றும் யாழில் பணிபுரியும் இராணுவத்தினரது பங்களிப்புடன் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் கடந்த நவம்பர் மாதம் 25 ஆம் திகதி இடம்பெற்றது.
வைத்தியர் கேர்ணல் A.T.S ஆரியரத்ன அவர்களின் தலைமையில் இந்த விரிவுரைகள் அதிகாரிகளுக்கு இடம்பெற்றன. இந்த செயலமர்வில் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் இருந்து 19 அதிகாரிகளும், கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திலிருந்து 22 அதிகாரிகளும் பங்கேற்றிக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Sport media | 『アディダス』に分類された記事一覧