30th November 2019 22:00:16 Hours
யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் அதிகாரிகளுக்கான சுயவளர்ச்சி தொடர்பான ஐந்து நாள் செயலமர்வு கடந்த நவம்பர் மாதம் 25 – 29 ஆம் திகதி வரை இடம்பெற்றது.
இந்த செயலமர்வு யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய அவர்களது வழிக்காட்டலின் கீழ் இராணுவ பயிற்சி பணியகத்தின் அனுசரனையில் இடம்பெற்றன.
சொப்ட் சர்வதேச தனியார் நிறுவனத்தின் பணிப்பாளர் தலைமை நிர்வாக அதிகாரியான திருமதி சுலக்ஷனா பெர்ணாண்டோ மற்றும் ஓய்வு பெற்ற கெப்டன் சுமேத மிரிஹான அவர்கள் இந்த செயலமர்வில் விரிவுரைகளை மேற்கொண்டனர்.
51,52 மற்றும் 53 ஆவது படைப் பிரிவில் பணியாற்றும் 25 அதிகாரிகள் இந்த செயலமர்வில் பங்கேற்றிக் கொண்டனர். இவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைத்தலும் இடம்பெற்றன. Nike footwear | Sneakers