30th November 2019 22:15:16 Hours
கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரஷிக பெர்ணாண்டோ அவர்களது தலைமையில் ‘துரு சிரச’ கருத்திட்டத்தின் கீழ் 40,000 பலாக்கன்று மரநடுகை திட்டமானது கிழக்கு பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டன.
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பூரன ஏற்பாட்டில் கடந்த நவம்பர் மாதம் (29) ஆம் திகதி 500 மரக்கன்று நடுகைகள் அரலாஹன்வில வித்தியாலயத்தில் இடம்பெற்றன.
மகாவலி பிரதேச வலய திட்டமிடல் முகாமையாளர் திரு துஷார தந்தநாராயணன் அவர்களால் கிழக்கு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரஷிக பெர்ணாண்டோ அவர்களுக்கு இந்த மரநடுகைகள் தொடர்பாக விடுத்த வேண்டுகோளுக்கமைய இந்த பணிகள் கிழக்கு பாதுகாப்பு படையினரால் மேற்கொள்ளப்பட்டன.
அரலஹன்வில வித்தியாலயத்தில் இடம்பெற்ற இந்த மரநடுகை நிகழ்வில் 100 அங்கத்தவர்களை பிரதிநிதித்துவ படுத்தி 233 ஆவது படைத் தலைமையகத்தின் படையினர்கள், அதிகாரிகள் பங்கேற்றிக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.Mysneakers | Patike – Nike Air Jordan, Premium, Retro Klasici, Sneakers , Iicf