16th November 2019 19:20:11 Hours
மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த முதலிகே அவர்களது தலைமையில் மேற்கு படைத் தலைமையகத்தின் 7 ஆவது ஆண்டு நிறைவு விழாவானது இம் மாதம் (15) ஆம் திகதி தலைமையகத்தில் இடம்பெற்றது.
ஆண்டு நிறைவை முன்னிட்டு பனாகொடையிலுள்ள மேற்கு படைத் தலைமையகத்தில் படைத் தளபதிக்கு இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வைத்து கௌரவிக்கப்பட்டார்.
பின்னர் தலைமையகத்திற்கு வருகை தந்த படைத் தளபதி தலைமையக வளாகத்தினுள் மரநடுகைகள் மேற்கொண்டு படையினர் மத்தியில் உரையையும் நிகழ்த்தினார். பின்னர் தளபதி அவர்களினால் படையினர்கள் மற்றும் சிவில் ஊழியர்களுக்கு டீசேட்டுகள் வழங்கி வைக்கப்பட்டன.
ஆண்டு நிறைவை முன்னிட்டு 15 பௌத்த மதகுருமாரது பங்களிப்புடன் சமய அனுஷ்டானங்களுடன் தானங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
அதனை தொடர்ந்து ஏனைய மத வழிபாடுகள் பன்னிபிடிய கிறிஸ்தவ தேவாலயத்திலும், ஹலகெதர பள்ளிவாசலிலும், ஹங்வெல இந்து கோயிலிலும் படையினரது பங்களிப்புடன் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் அதிகாரிகள் மற்றும் படை வீரர்கள் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். latest Nike release | Upcoming 2021 Nike Dunk Release Dates - Iebem-morelos