Header

Sri Lanka Army

Defender of the Nation

07th November 2019 18:28:33 Hours

படையினர்களுக்கு புதிய கோப்ரல் உணவு விடுதி மற்றும் சமையலறை திறந்து வைப்பு

அநுராதபுரம் கல்குளத்தில் அமைந்துள்ள 3 ஆவது இராணுவ பொலிஸ் படையணி தலைமையகத்தில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட கோப்ரல் உணவு விடுதி மற்றும் சமையலறை இம் மாதம் (7) ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.

இந்த புதிய நிர்மானிப்பு கட்டிடங்கள் 3 ஆவது இராணுவ பொலிஸ் படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேர்ணல் M.M.M.P மகேஷ் குமார அவர்களது அழைப்பையேற்று இராணுவ பொலிஸ் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் D.K.G.D சிறிசேன அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.

மூன்றாவது இராணுவ பொலிஸ் படையணி தலைமையகத்திற்கு வருகை தந்த படைத் தளபதியை படையினர் இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வைத்து வரவேற்றனர்.

இந்த திறப்பு விழா நிகழ்வில் இராணுவ பொலிஸ் படையணியைச் சேர்ந்த இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் படை வீரர்கள் இணைந்திருந்தனர். best Running shoes | Klær Nike