30th October 2019 14:20:04 Hours
57 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரதீப் டி சில்வா அவர்களின் பரிந்துரைப்பின் கீழ் இராணுவத்தினருக்கு பேச்சுவார்த்தை நுட்பங்கள் தொடர்பான விரிவுரைகள் இம் மாதம் (29) ஆம் திகதி கிளிநொச்சி பயன்பாட்டு கட்டிட மண்டபத்தில் இடம்பெற்றன.
இந்த விரிவுரைகள் 573 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி கேர்ணல் U. L. J. S பெரேரா அவர்களது பூரன ஏற்பாட்டில் இங்கிலாந்தில் வசிப்பாளரான கலாநிதி ஸ்டீபன் பத்மராஜா அவர்களினால் ஆற்றப்பட்டன.
படையினரது அறிவை மேம்படுத்தும் நோக்கத்துடனும், பயனளிக்கும் வகையில் இந்த விரிவுரைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இந்த விரிவுரைகளில் 57 ஆவது படைத் தளபதி, 571 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி உட்பட 60 அதிகாரிகள் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Sportswear Design | Nike