11th September 2019 04:53:33 Hours
வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன அவர்களது பணிப்புரைக்கமைய வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் பணிபுரியும் அதிகாரிகளுக்கு இராணுவ பொதுமக்களுக்கு இடையே உறவு முறையை மேம்படுத்தும் நோக்கத்துடன் ஒருங்கினைப்பு தொடர்பாக விழிப்புணர்வு செயலமர்வு இம் மாதம் (5) ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டன.
இந்த செயலமர்வானது வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக கேட்போர் கூடத்தில் 35 இராணுவ அதிகாரிகளது பங்களிப்புடன் இடம்பெற்றது.
இந்த செயலமர்வில் ஆரம்ப உரையை 56 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் புராக செனவிரத்ன அவர்கள் ஆற்றினார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். best shoes | FASHION NEWS