Header

Sri Lanka Army

Defender of the Nation

10th September 2019 16:22:16 Hours

புல்மோட்டை, திருகோணமலை மற்றும் விக்டோரியா அனைக்கட்டுகளில் இடம்பெற்ற கூட்டுப்படை பயிற்சி நடவடிக்கைகள்

புல்மோட்டை நகர பிரதேசத்தில் இம் மாதம் (10) ஆம் திகதி விஷேட படையணியைச் சேர்ந்த விஷேட மோட்டார் சைக்கிள் ஓட்டுணர்களும், ரஷியா நாட்டைச் சேர்ந்த இராணுவ அதிகாரிகள் இருவரது பங்களிப்புடன் தீவிரவாதிகளை ஒழிக்கும் கூட்டுப்படை போலியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த ஒத்திகை கூட்டு நடவடிக்கையில் அனைத்து பயங்கரவாதிகளும் வெடிபொருட்களும் மீட்கப்பட்டு இறுதியில் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படாதவாறும், பொதுமக்களை காப்பாற்றி பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.

இதற்கிடையில், திங்கட்கிழமை காலை (9) மணிக்கு திருகோணமலை மைதானத்திலும், இந்திய எரிபொருள் கூட்டுத்தாபனத்திலும் கூட்டுப்படை பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்போது 2 ஆவது கொமாண்டோ படையணி, கடற்படை விஷேட படகுப் படையணி, விமானப்படையைச் சேர்ந்த MI-17 ஹெலிகொப்டர்களை பயண்படுத்தப்பட்டன.

மேலும் இம் மாதம் (8) ஆம் திகதி பொல்கொல்லை பிரதேசத்திலுள்ள விக்டோரியா அனைக்கட்டில் 3 ஆவது கொமாண்டோ படையணி மற்றும் பொறிமுறை காலாட் படையணியினர், இலங்கை கடற்படையினர் மற்றும் விமானப்படையணியின் 212 பெல்ஹெலிகொப்டரின் உதவியுடன் ஒருங்கனைந்து இந்த கூட்டுப்படை பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த அப்பியாச பயிற்சிகள் கூட்டுப்படைப் பயிற்சி பணிப்பாளரும், மத்திய பாதுகாப்பு படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் லக்சிறி வடுகே, பிரதி கூட்டுப்படை பணிப்பாளர் பிரிகேடியர் K.A சமரசிறி, கொமாண்டோ பிரிக்கட்டின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேர்ணல் T.C.M.G.S.T குரே அவர்களது தலைமையில் மேற்கொள்ளப்பட்டன. Running Sneakers Store | Women's Nike Air Jordan 1 trainers - Latest Releases , Ietp