05th August 2019 19:06:53 Hours
23 ஆவது படைப் பிரிவின் கீழ் இயங்கும் 233 ஆவது படைத் தலைமையத்தின் கீழ் சேவைபுரியும் படையினரின் ஒருங்கிணைப்பு மற்றும் ராஜகிரியவில் உள்ள திரு நதூன் ராஜபக்ஷ அவர்களின் அனுசரணையில், தேவையுள்ள மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள், சீருடைகள் ,மற்றும் உலர் உணவு பொதிகள் முதலியன கடந்த வெள்ளிக் கிழமை மாதுவெல கனிஷ்ட பாடசாலையில் வைத்து வழங்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, திரு மற்றும் திருமதி ராஜபக்ஷ அவர்களினால் அவர்களின் காலமான பெற்றோர்களின் ஆத்மா திருப்திக்காக வழங்கப்பட்ட இப் பொதிகளை 65 மாணவர்கள் மற்றும் அவர்களுடைய பெற்றோர்கள் பெற்றுக்கொண்டனர்.
மேலும், இந்நிகழ்வில் கிழக்கு பாதுகாப்பு கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர, 233 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளைத் தளபதி ராஜித் எல்விடடிகல, திரு ராஜபக்ஷ மற்றும் அவரது பாரியார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு குறித்த பொதிகளை வழங்கினர். jordan Sneakers | FASHION NEWS