Header

Sri Lanka Army

Defender of the Nation

02nd August 2019 10:56:39 Hours

வன்னி படையினர்களுக்காக ஒழுங்கு செய்யப்பட்ட தியான நிகழ்வு

இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களது எண்ணக் கருவிற்கமைய இராணுவ உளவியல் பணியகத்தின் ஏற்பாட்டில் வன்னி படையினர்களுக்காக ஒழுங்கு செய்யப்பட்ட மனதை ஒரு நிலைபடுத்தும் தியான நிகழ்வு ஜூலை மாதம் (31) ஆம் திகதி இடம்பெற்றன.

கந்துபோத பவுன் தியான மத்திய நிலையத்தின் பிரதான பயிற்றுவிப்பாளரான மதிப்புக்குரிய திவசேனபுர விமல தேரர் அவர்களது தலைமையில் இந்த தியான நிகழ்வு இடம்பெற்றது.

வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன அவர்களது பணிப்புரைக்கமைய 21, 54, 56, 61, 62 ஆவது படைப் பிரிவு மற்றும் வடக்கு மத்திய பாதுகாப்பு முன்னரங்க தலைமையகத்தைச் சேர்ந்த 100 இராணுவ வீரர்களின் பங்களிப்புடன் இந்த தியான நிகழ்வு இடம்பெற்றன.

இந்த தியான நிகழ்வில் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பொது பதவிநிலை அதிகாரி பிரிகேடியர் H.P ரணசிங்க, இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர். latest jordan Sneakers | Nike