01st August 2019 16:12:12 Hours
வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன அவர்களது தலைமையில் நடக்கவிருக்கும் மடு தேவாலயத்தின் திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு தொடர்பான ஒன்றுகூடல் ஜூலை மாதம் (31) ஆம் திகதி இடம்பெற்றது.
இந்த திருவிழாவிற்கு நாடாளவியல் ரீதியாக பெரும்பாலான கிறிஸ்த்தவ மக்கள் வருகை தர இருப்பதால் இவர்களது பாதுகாப்பு நிமித்தம் இந்த பாதுகாப்பு ஒன்றுகூடலானது ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.
இதில் 61 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் R.K.B.S கெடகும்புர, 613 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி கேர்ணல் R.K.N.C ஜயவர்தன , பொலிஸ் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் மடுதேவாலயத்தின் அருட்தந்தை பெப்பி சூசை அவர்களும் இந்த பாதுகாப்பு ஒன்றுகூடலில் இணைந்து கொண்டனர். buy shoes | Nike Shoes