31st July 2019 12:00:02 Hours
வன்னி பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன அவர்கள் 61, 54 ஆவது படைப் பிரிவுகளிற்கு உத்தியோகபூர்வமான விஜயத்தை கடந்த ஜூலை மாதம் 29 – 30 ஆம் திகதிகளில் மேற்கொண்டார்.
61 ஆவது படைப் பிரிவிற்கு வருகை தந்த வன்னி படைத் தளபதியை 61 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெரைல் R.K.B.S கெடகும்புர அவர்கள் வரவேற்று பின்னர் இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி கௌரவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டார். பின்னர் வன்னி தளபதியினால் இவரது வருகையை நினைவு படுத்தும் முகமாக தலைமையக வளாகத்தினுள் மரநடுகையும் மேற்கொள்ளப்பட்டு படைப் பிரிவின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட தேநீர் விருந்துபசார நிகழ்விலும் வன்னித் தளபதி பங்கேற்றிக் கொண்டார்.
61 ஆவது படைப் பிரிவின் கடமை பொறுப்புக்கள் மற்றும் விதிமுறைகள் தொடர்பான விடயங்களையும் உயரதிகாரிகளுடன் வன்னி படைத் தளபதி உரையாடி அதற்கான பணிப்புரைகளும் வழங்கி வைத்தார். பின்னர் பம்பைமடுவிலுள்ள பட்டாலியன் பயிற்சி நிலையத்திற்கு விஜயத்தை மேற்கொண்டு அங்குள்ள பிரதான பயிற்சிவிப்பாளர்கள் மற்றும் படையினருடன் உரையாடலையும் மேற்கொண்டார்.
54 ஆவது படைப் பிரிவிற்கு வருகை தந்த வன்னி தளபதியை 54 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் A.A.I.J பண்டார அவர்கள் வரவேற்று பின்னர் இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி கௌரவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டார். பின்னர் இவரது வருகையை நினைவு படுத்தும் முகமாக தலைமையக வளாகத்தினுள் மா மரநடுகை மேற்கொள்ளப்பட்டன. பின்னர் வன்னி தளபதியினால் படையினர் மத்தியில் உரையும் நிகழ்த்தப்பட்டன.
பின்னர் வன்னி தளபதியினால் துருலிய வெனுவேன் அபி எனும் தொனிப் பொருளின் கீழ் சிலாவத்துறையில் ஆரம்பிக்கப்பட்ட மரநடுகை திட்டத்தின் கீழ் பராமரித்து வரும் வில்பத்து தேசிய வனாந்தரத்தில் மரக்கன்றுகள் நட்டாப்பட்டன.
இச்சந்தர்ப்பத்தில் படைப் பிரிவின் படைத் தளபதிகள், படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதிகள், கட்டளை அதிகாரிகள் மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர். latest Running | Nike News