31st July 2019 09:35:07 Hours
இராணுவ தளபதி அவர்களின் ‘ துருலிய வெனு வென் அபி’’ மர நடுகை திட்டத்திற்காக, 17 தன்னார்வ நிறுவன குழுவினால் 1000 திற்கும் அதிகமான மரக்கன்றுகள் 14 ஆவது படைப்பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சூல அபேநாயக அவர்களிடம் கடந்த 28 ஆம் திகதி ராஜகிரிய ஒபேசேகர மாவத்தையிலுள்ள சன சமூக நிலையத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டன.
அதனைத் தொடந்து, நிறுவன பிரதிநிதிகளினால் இம்மரக்கன்றுகள் உத்தியோகபூர்வமாக 14 ஆவது படைப்பிரிவின் படைத் தளபதியிடம் கையளிக்கப்பட்டன.
மேலும் அங்கு வருகைதந்த பிரதிநிதிகள் எதிர்காலத்தில் தங்களால் இத்திட்டதிற்கு உதவி வழங்குவதற்கான ஆர்வத்தினை தெரிவித்ததோடு, மர நடுகை நிகழ்ச்சி திட்டத்தின் இடத்தையும் பார்வையிட்டனர். latest Running | Jordan Shoes Sale UK