30th July 2019 13:37:01 Hours
புதிதாக நியமிக்கப்பட்ட மேற்கு பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் மஹிந்த முதலிகே அவர்கள் இம் மாதம் (26) ஆம் திகதி பூசாவில் அமைந்துள்ள 58 ஆவது படைப் பிரிவிற்கு உத்தியோகபூர்வமான விஜயத்தை மேற்கொண்டார்.
இங்கு வருகை தந்த மேற்கு பாதுகாப்பு படைத் தளபதியை 58 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜயந்த குணரத்ன அவர்கள் வரவேற்றார். பின்னர் தளபதி அவர்களுக்கு இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்புகள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.
பின்னர் 58 ஆவது படைப் பிரிவினுள் புதிதாக அமைக்கப்பட்ட டெனிஷ் மைதானமும் மேற்கு பாதுகாப்பு படைத் தளபதியினால் திறந்து வைக்கப்பட்டு தலைமையக வளாகத்தினுள் மரநடுகையும் மேற்கொள்ளப்பட்டன.
அதனை தொடர்ந்து படைத் தளபதி அவர்கள் 3, 14 ஆவது (தொ) கெமுனு காலாட் படையணி தலைமையகங்களுக்கும் உத்தியோகபூர்வமான இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டார்.
மேலும் படைப் பிரிவின் படைத் தளபதிகள், படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதிகள் மற்றும் கட்டளை அதிகாரிகளை சந்தித்து பல்வேறு நிர்வாக அம்சங்கள், செயல்பாட்டுத் தேவைகள், நலன்புரி நடவடிக்கைகள் மற்றும் படையினரின் தேவைகள் தொடர்பான விடயங்களை கலந்துரையாடினார். affiliate link trace | New Jordans – Air Jordan 2021 Release Dates , Gov