28th July 2019 20:34:11 Hours
பின்னவல மத்தியகல்லூரியைச் சேர்ந்த 25 உறுப்பினர்களைக் கொண்ட மாணவசிப்பாய்க் குழுவினருக்கு, பூசாவிலுள்ள இலங்கை இலேசாயுத காலாட் படையணி பயிற்சி பாசறையில் 27- 28 திகதிகளில் இராணுவ நடைமுறை மற்றும் சம்பிரதாயங்கள் சம்பந்தமான விளக்கமானது வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியின் ஏற்பாடானது, இராணுவ தளபதி அவர்களின் ஆசிர்வாதத்துடன் பாடசாலையின் பழைய மாணவர்களினால் மேற்கொள்ளப்பட்டது.
இவ் இரண்டு நாள் பயிற்சின் போது ஆளுமை விருத்தி, திறமையை விருத்தி செய்தல், தீர்மானம் மேற்கொள்ளும் திறன், ஒழுக்க விதிமுறைகள் உள்ளிட்ட தலைமைத்துவ பயிற்சிகள் சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டதோடு, செயல் விளக்கமும் அளிக்கப்பட்டது
மேலும், 58 ஆவது படைப்பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜயந்த குணரத்ன அவர்களின் மேற்பார்வையின் கீழ் இவ் இரண்டு நாள் பயிற்சியானது இடம்பெற்றன
பயிற்சி கல்லூரியின் பிரதான பயிற்றுவிப்பாளர் மேஜர் துசந்த களுவடவ அவர்களினால் இந்த விரிவுரை நடாத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது Sportswear free shipping | Nike