27th July 2019 17:01:41 Hours
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 23 ஆவது காலாட் படைப் பிரிவின் 22 ஆவது ஆண்டு நிறைவு விழா இம் மாதம் 20 – 23 ஆம் திகதி வரை இடம்பெற்றது.
ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு இந்த படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் கபில உதுலுபொல அவர்களது ஏற்பாட்டில் பல்வேறுபட்ட நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.
சோமாவதி விகாரை வளாகத்தினுள் கப்ருகா மற்றும் போதி பூஜை ஆசிர்வாத சமய அனுஷ்டான நிகழ்வு இம் மாதம் (20) ஆம் திகதி இடம்பெற்றது. அதனை தொடர்ந்து இம் மாதம் (23) ஆம் திகதி படைத் தளபதிக்கு இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
மேலும் கதிரவெலியில் அமைந்துள்ள திலகவதி சிறுவர் மகளிர் விடுதியிலுள்ள பிள்ளைகளுக்கு பகல் உணவுகள் வழங்கி வைக்கப்பட்டன.
இறுதி நாள் படைப் பிரிவின் ஏற்பாட்டில் ஒழங்கு செய்யப்பட்ட பகல் விருந்தோம்பல் தலைமையகத்தில் அனைவரது பங்களிப்புடன் இடம்பெற்றது. அத்துடன் குழுப்புகைப்படத்திலும் அனைவரும் இணைந்து கொண்டனர். Running sports | Nike - Sportswear - Nike Tracksuits, Jackets & Trainers