27th July 2019 17:03:30 Hours
இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களது எண்ணக்கருவிற்கமைய இராணுவ பொது சேவைப் படையணி தலைமையக கேட்போர் கூடத்தில் ‘அரசு விலைமனுக்களுக்கான அழைப்பு நடைமுறை மற்றும் இராணுவ ஏல ஆவணம்’ தொடர்பான ஒரு நாள் கருத்தரங்கு இம் மாதம் (26) ஆம் திகதி இடம்பெற்றது.
உபகரண மாஸ்டர் ஜெனரல் மேஜர் ஜெனரல் H.G.I வித்தியானந்த மற்றும் மாஸ்டர் ஜெனரல் போர்கருவி மேஜர் ஜெனரல் H.R.K.P பீரிஸ், இராணுவ லொஜஸ்டிக் கல்லூரியின் கட்டளை தளபதி பிரிகேடியர் W.G.D வன்னியாரச்சி மற்றும் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் நிர்வாக உபகரண பிரதானி பிரிகேடியர் M.R வன்னியாரச்சி அவர்களது பங்களிப்புடன் இந்த கருத்தரங்கு இடம்பெற்றன.
இந்த கருத்தரங்கில் வரவேற்புரை பிரிகேடியர் W.G.D வன்னியாரச்சி அவர்களினால் ஆற்றப்பட்டன. அத்துடன் ‘அரசு விலைமனுக்களுக்கான அழைப்பு நடைமுறை மற்றும் இராணுவ ஏல ஆவணம்’ தொடர்பான விடயங்களை உள்ளடக்கி விரிவுரைகள் மேஜர் ஜெனரல் H.R.K.P பீரிஸ் அவர்களினால் ஆற்றப்பட்டன.
திருகோணமலை லொஜஸ்டிக் கல்லூரியின் பூரண ஏற்பாட்டில் இந்த கருத்தரங்குகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. இதில் 84 இராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டு பயன்களை பெற்றுள்ளனர். Sports Shoes | Nike