27th July 2019 17:05:25 Hours
57 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் ஏ.எஸ். ஹெவவிதரண அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 574 ஆவது படையகத்தின் ஏற்பாடு மற்றும் அனுசரணையுடன் கடந்த செவ்வாய்க் கிழமை 23 ஆம் திகதி தேவையுள்ள பாடசாலை மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்களானது மாங்குளம் மஹா வித்தியாலயத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டன.
மேலும், குறைந்த வருமானத்தை உடைய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் கல்வியினை மேம்படுத்தல், சிவில் சமூகம் மற்றும் இராணுவத்திற்கு இடையிலான நல்லுறவை மேம்படுத்துவதை அடிப்படைடயாகக் கொண்டு இவ் ஏற்பாடானது செய்யப்பட்டது.
அதனைத் தொடந்து, மாங்குளம் மஹா வித்தியாலயத்தியம், ஓளுமடு தழிழ் பாடசாலை, சம்முகாரத்னம் கனிஷ்ட பாடசாலை, பனிக்கம் குளம், கனிஷ்ட பாடசாலை, அம்பாகமம் கனிஷ்ட பாடசாலை மற்றும் புலிமுச்சானட குளம் ஆரம்ப பாடசாலை உட்பட ஆறு பாடசாலைகளில் கல்வி கற்கும் 160 மாணவர்களுக்கான காலணிகள், புத்தகங்கள், பேனாக்கள், பென்சில்கள் ,அப்பியாசக் கொப்பிகள், மற்றும் ஏனைய பொருட்கள் உள்ளிட்ட பல பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
மேலும், 57 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி, 574 ஆவது படையகத்தின் தளபதி, 57 ஆவது பிரிவின் கேணல் ஜெனரல் ஸ்டாப், படைத் தளபதிகள் ,துணுக்காய் கல்வி வலயத்தின் உதவி கல்வி பணிப்பாளர், பாடசாலை அதிபர்கள், மானவர்கள், ஆசிரியர்கள், மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டதுடன், 57 ஆவது படைப் பிரிவில் சேவையாற்றும் இராணுவ அதிகாரிகள் மற்றும் இராணுவ சிப்பாய்களின் நிதி பங்களிப்புடன் குறித்த மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் கொள்வனவு செய்யப்ப்டன என்பது குறிப்பிடத்தக்கது.affiliate link trace | Air Jordan Retro - 2021 Release Dates + Preview , Fitforhealth