27th July 2019 16:56:08 Hours
யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகம் மற்றும் 55 ஆவது படைப் பிரிவிற்கு கீழ் இயங்கும் 551 ஆவது படைத் தலைமையகத்தின் 19 ஆவது ஆண்டு நிறைவு விழா இம் மாதம் (19) ஆம் திகதி இடம்பெற்றது.
இந்த ஆண்டு நிறைவை முன்னிட்டு இம் மாதம் (18) ஆம் திகதி ஆணையிறவு நினைவு தூபி வளாகத்தினுள் அஞ்சலி செலுத்தும் நிகழ்வும் இடம்பெற்றது.
551 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி கேர்ணல் அசங்க பெரேரா அவர்களுக்கு படைத் தலைமையகத்தில் இந்த ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இந்த அணிவகுப்புகள் 4 ஆவது சிங்கப் படையணி மற்றும் 16 (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையணியினால் வழங்கி வைக்கப்பட்டன. அதனை தொடர்ந்து கட்டளை தளபதி அவர்களினால் படைத் தலைமையக வளாகத்தினுள் மரநடுகையும் மேற்கொள்ளப்பட்டன.
மேலும் சமய அனுஷ்டான ஆசிர்வாத நிகழ்வுகளும் இடம்பெற்றன. அதில் பௌத்த மதத்தை பிரதிநிதித்துவபடுத்தி மஹா சங்கதேரரின் தலைமையில் “பிரித்” தான நிகழ்வுகளும், பருத்திதுறையில் இந்து மதத்தை பிரதிநிதித்துவபடுத்தி பிள்ளையார் கோயிலில் விஷேட பூஜைகளும், கிறிஸ்த்தவ மதத்தை பிரதிநிதித்துவபடுத்தி புனித தோமஸ் தேவாலயத்தில் பூஜை நிகழ்வுகளும், முஸ்லீம் மதத்தை பிரதிநிதித்துவபடுத்தி முகைதீன் ஜூம்மா பள்ளிவாசலில் விஷேட பிறார்த்தனை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
அத்துடன் ஆண்டு நிறைவு நிகழ்வை முன்னிட்டு பருத்திதுறையிலுள்ள மந்திகை வைத்தியசாலையில் 60 பேருக்கு இராணுவத்தினரால் இரத்த தானங்களும் இம் மாதம் (21) ஆம் திகதி வழங்கப்பட்டன.jordan release date | Air Jordan