22nd July 2019 15:37:13 Hours
இம்முறை உயர்தர பரீட்சைக்கு தோற்றவிருக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு 59 , 592 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் கருத்தரங்குகள் ஒழுங்கு செய்யப்பட்டு இம் மாதம் (19) ஆம் திகதி முள்ளியாவளை வித்தியானந்த தேசிய கல்லூரியில் இடம்பெற்றது.
இந்த கருத்தரங்குகள் முள்ளியாவளை மக்கள் வங்கியின் அனுசரனையில் இராணுவத்தின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.
பௌதீகவியல் பாடத்தில் சிறப்பு தேர்ச்சி பெற்ற ஆசிரியரான ஜி பிரபாகரன் அவர்களினால் இந்த கருத்தரங்குகள் மேற்கொள்ளப்பட்டன. வித்தியானந்த தேசிய பாடசாலை, முல்லைத்தீவு வித்தியாலயம், வேம்மலை வித்தியாலயம் மற்றும் புதுக்குடியிருப்பு வித்தியாலயத்தை சேர்ந்த 150 மாணவர்கள் கருத்தரங்குகளில் பங்கேற்றிக் கொண்டனர்.
இந்த கருத்தரங்கு நிகழ்விற்கு பிரதம அதிதியாக 59 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் K.H.P.P பெர்ணாண்டோ அவர்கள் வருகை தந்து கருத்தரங்குகளை ஆரம்பித்து வைத்தார். Asics shoes | Air Jordan