21st June 2019 15:10:50 Hours
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக வளாகத்தினுள் அமைந்திருக்கும் இராணுவ வைத்தியசாலையானது நூறுக்கு மேற்பட்ட இராணுவ நோயாளர்களுக்கு மருந்து வழங்கும் வைத்தியசாலையாக விளங்குகின்றது.
இந்த வைத்தியசாலையின் மேலதிக தேவையின் நிமித்தம் வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்களது வேண்டுகோளை முன்னிட்டு இரண்டு அவசர சிகிச்சை படுக்கைகள் குளியாபிடியவைச் சேர்ந்த பிரசித்திபெற்ற வியாபாரியான திரு சேனக ரொட்ரிகோ அவர்களினால் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டன.
அவசர சிகிச்சை படுக்கைகள் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பொது நிர்வாக பிரதானி பிரிகேடியர் ஹரேந்திர ரணசிங்க அவர்களினால் வன்னி வைத்தியசாலை நிர்வாக பிரிவின் பிரதானிகளிடம் இம் மாதம் (18) ஆம் திகதி கையளிக்கப்பட்டன.
இச்சந்தர்ப்பத்தில் வன்னி பாதுகாப்பு தலைமையகத்தின் நிர்வாக விநியோக பிரதானி கேர்ணல் சமரகோன் மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர்.
அவசர சிகிச்சை பிரிவில் பராமரிப்பதற்காக இந்த படுக்கைகள் வழங்கப்பட்டுள்ளன.Sportswear Design | Best Nike Air Max Shoes 2021 , Air Max Releases and Deals