17th June 2019 21:58:33 Hours
யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் சர்வதேச தற்பாதுகாப்பு கலை எகடமியின் பங்களிப்புடன் ஐந்தாவது தடவை இடம்பெற்ற தற்பாதுகாப்பு கலை பயிற்சிகள் ஜூன் மாதம் 12 ஆம் திகதி தொடக்கம் 15 ஆம் திகதி வரை இடம்பெற்றது.
இந்த பயிற்சிகளின் நிறைவு விழாவிற்கு பிரதம அதிதியாக யாழ் பாதுகாப்பு படைத் தளபதி அவர்கள் வருகை தந்து பயிற்சிகளை நிறைவு செய்த இராணுவத்தினருக்கு சான்றிதழ்கள் வழங்கி கௌரவித்தார்.
மேலும் சர்வதேச தற்பாதுகாப்பு கலை எகடமியின் பணிப்பாளர் மற்றும் பிரதான பயிற்றுவிப்பாளரான திரு பிரஜாலித்த புஸ்ப குமார அவர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார். Sport media | Nike