16th June 2019 18:59:59 Hours
தற்கொலை குண்டுத்தாக்குதலினால் சேதமாக்கப்பட்ட மட்டக்களப்பிலுள்ள சியோன் தேவாலயத்தினை பார்வையிடுவதற்காக பேராயர் கலாநிதி கர்தினால் மல்கம் ரஞ்ஜித் அவர்கள் கடந்த சனிக்கிழமை 15 ஆம் திகதி தனது விஜயத்தினை மேற்கொண்டிருந்தார்.
முதலில் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்துக்கு சென்றடைந்த பேராயர் கர்தினால்; அவர்கள், கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர அவர்களினால் வரவேற்கப்பட்ட பின்னர் மட்டக்களப்பிலுள்ள ஆயர் இல்லத்திற்கு சென்றடைந்தார்.
மேலும் அவர் தனது ஆழ்ந்த அனுதாபத்தை மதிப்பிற்குரிய ஓய்வு பெற்ற அருற்தந்தை கலாநிதி ஜோசப் பொன்னய்யா, தலைமை மத போதகர் அருற்தந்தை ரொஷான் மகேஷன் மற்றும் ஏனைய மத போதகர்களிடம் தெரிவித்ததோடு, இராணுவத்தினரால் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டுவரும் தேவாலய மீள்கட்டுமானபணிகளையும் பார்வையிட்டார்.
அதனைத் தொடர்ந்து பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்ஜித் அவர்கள் பல பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்தித்து தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்தார். jordan release date | Ανδρικά Nike