Header

Sri Lanka Army

Defender of the Nation

07th June 2019 14:08:00 Hours

படையினரால் சிரமதானப் பணிகள் முன்னெடுப்பு

அமைதிபுரம் பாலர் பாடசாலை அதிகாரிகளால் விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்கிணங்க 652 ஆவது படைப் பிரிவின் 17படையினர் மற்றும் பொதுமக்களின் ஒருங்கிணைப்பில் அமைதிபுரம் பாலர் பாடசாலை வளாகமானது கடந்த வியாழக் கிழமை (06) சுத்திகரிக்கப்பட்டது.

அந்த வகையில் 65ஆவது படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் கே ஏ டயிள்யூ குமரப்பெரும அவர்களின் வழிகாட்டலின் கீழ் 7 ஆவது இலங்கை தேசிய பாதுகாப்பு படையினரால் 652 ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியவர்களின் கண்காணிப்பின் கீழ் இவ்வாறான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

அந்த வகையில் 17 ஆவது (தொண்டர்) இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் 17 பரைடயினர் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் 15 சேவகர்கள் போன்றோர் ஒன்றினைந்து மல்லாவி வைத்தியசாலை வளாகத்தை சுத்திகரிக்கும் பணிகளை கடந்த வியாழக் கிழமை (06) மேற்கொண்டர்.

மேலும் இந் நிகழ்வுகள் 65ஆவது படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் கே ஏ டயிள்யூ குமரப் பெரும அவர்களின் கண்காணிப்பில் 653ஆவது படைத் தலைமையக தளபதியவர்களின் வழிகாட்டலின் கீழ் இடம் பெற்றது.

அந்த வகையில் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 65ஆவது படைத் தலைமையக 652ஆவது படைப் பிரிவின் கீழ் காணப்படும் 7ஆவது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியினரால் கிராம சேவகர் காரியாலய வளாகமானது கடந்த புதன் கிழமை (05) சுத்திகரிக்கப்பட்டது.

மேலும் 16 படையினர் மற்றும் 30 பொது மக்கள் இணைந்து கோட்;டைகட்டியார் கிராம சேவகர் காரியால வளாகமான விடுமுறை தினங்களில் சுத்திகரிக்கப்பட்டது.

இச் சிரமதானப் பணிகள் 65ஆவது படைத் தலைமைய 652 ஆவது படைத் தளபதியவர்களின் தலைமையில் கண்காணிப்பட்டு மேற்கொள்ளபட்டது. Running sports | Nike Air Jordan XXX Basketball Shoes/Sneakers 811006-101 Worldarchitecturefestival