26th February 2019 12:40:22 Hours
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 652ஆவது மற்றும் 653ஆவது படைப் பிரிவின் கீழ் இயங்கும் 65 ஆவது படைப் பிரிவின் படையினர்களின் பங்களிப்புடன் கடந்த (23) ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சமூக நலன் வேலைத் திட்டங்களை மேற்கொண்டன.
அதற்கமைய 652 ஆவது படைப் பிரிவின் இலங்கை இராணுவ 7ஆவது தேசிய பாதுகாப்பு படையினர் அக்கராயன்குலம் பிள்ளையார் கோவில் வளாகத்தில் சுத்தம் படுத்தியதுடன் 653 ஆவது படைப் பிரிவின் 10 ஆவது கலாட் படையணியினர் வன்னிவிளான்குளம் பாடசாலையில் சிரமதான பணிகளை மேற் கொண்டன. இப் பணிகள் 2 இராணுவ அதிகாரியின் தலைமையில் 53 படையினர் மற்றும் பொதுமக்களும் இணைந்து இந்த சமூக நலன் வேலைத் திட்டங்களை மேற்கொண்டனர்.
இப் பணிகள் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரல்ப் நுஹேரா அவர்களின் வழிக்காட்டலுக்கமைய 65 ஆவது படைப் பிரிவின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் வசந்த குமரபெருமா அவர்களின் மேற்பார்வையின் கீழ் ஏற்பாடுசெய்யப்பட்டன.bridgemedia | Nike