02nd February 2019 22:10:08 Hours
இலங்கை இராணுவ பொறியியலாளர் படையணியினரால் நிர்மாணிக்கப்பட்ட இப் புதிய கட்டிடம் திறந்து வைப்பதற்கும், எம்பிலிபிட்டிய போதிராஜா தேசிய கல்லூரியின் வருடந்தோரும் நடைப் பெறும் விளையாட்டு போட்டியின் ஆரம்ப நிகழ்விற்கு பிரதான அதிதியாக எம்பிலிபிட்டிய ஸ்ரீ போதிராஜா அறக்கட்டளையின் நிர்வாக பணிப்பாளர் ஓமல்பே சோபித தேரர் அவர்களின் அழைப்பை ஏற்று இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் கலந்து கொண்டார்.
அதனைத் தொடர்ந்து பிரதான அதிதியாக வருகை தந்த இராணுவ தளபதியை பௌத்த மத குருவான சோபித்த தேரர் மற்றும் இக் கல்லூரி மாணவர்களால் வரவேற்கப்பட்டு அழைத்து செல்லப்பட்டார்.அதனைத் தொடர்ந்து அறக்கட்டளையின் நிர்வாக பணிப்பாளர் ஓமல்பே சோபித தேரர் அவர்களின் நிதியுதவியுடன் இலங்கை இராணுவ பொறியியலாளர் படையணியினரால் நிர்மாணிக்கப்பட்ட இப் புதிய கட்டிடத்தில் நினைவு படிகம் திறந்துவைக்கப்பட்டது. அதன் பின்னர் இலங்கை இராணுவ பொறியியலாளர் படையணியின் கட்டளை தளபதி உட்பட இராணுவ படையினரால் இக் கட்டிடம் நிர்மாணிக்க வழங்கப்பட்ட ஒத்துழைப்புக்கு பாடசாலை அதிபர் மற்றும் இராணுவ தளபதியினால் கௌரவிக்கப்பட்டு பரிசு வழங்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து இராணுவ தளபதி அவர்களால் விளையாட்டு போட்டிகள் தொடங்குவதற்கு சமிக்ஞை செய்தார். அத்துடன் இக் கல்லூரியில் கல்வி கற்கும் திறமையான மாணவர்களை கௌரவித்து இராணுவ தளபதி அவர்களால் விருதுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து இராணுவ தளபதி அவர்களால் கல்வி மற்றும் விளையாட்டு துறை ஒழுங்குமுறை தொடர்பாக தேவையை வலியுறுத்தி உறையாற்றினார்.
இந் நிகழ்வில் மகா சங்கம், நன்கொடையாளர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் கிராமவாசிகள் கலந்து கொண்டனர். Sports Shoes | Nike for Men