Header

Sri Lanka Army

Defender of the Nation

24th December 2018 14:52:48 Hours

வன்னியில் முப்படையினரின் குடும்பத்தினர் மற்றும் ஆசிரியர்களுக்கான கருத்தரங்கு

இராணுவ கடற்படை மற்றம் விமானப் படைகளின் மற்றும் பொலிஸ் திணைக்களத்தின் குடும்பத்தார் மற்றும் வவுணியா பிரதேசத்தின் வலயக் கல்வி ஆசிரியர்கள் போன்றோரிற்கு பெண்கள் மற்றும் சிறார்களுக்கெதிரான வன்முறை தொடர்பான வழிப்புணர்பு கருத்தரங்கானது வன்னிப் படைத் தலைமையகத்தில் கடந்த திங்கட் கிழமை (17) இடம் பெற்றது.

மேலும் இந் நிகழ்வுகள் வன்னிப் படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்களின் தலைமையில் இப் பிரதேசத்தைச் சேர்ந்த 1500ற்கும் மேற்பட்ட குடும்பத்தினரின் பங்களிப்போடு இடம் பெற்றது.

இக் கருத்தரங்கில் சிறுவர் பெண்கள் பிரிவின் பொலிஸ் உத்தியோகத்தரான திரு மனோச் சமரசேகர அவர்களால் சிறுவர் மற்றும் பெண்களுக்கெதிரான வன்முறைகள் தொடர்பான விரவுரைகள் நிகழ்த்தப்பட்டது. மேலும் இதற்கான காரணியாக அமையும் சமூக வலைத் தளங்கள் போன்றன தொடர்பாகவும் அவர் விளக்கியுள்ளார். அத்துடன் சமூகத்தில் சிறார்களுக்கு ஏற்படும் வன்முறைகள் தொடர்பாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் இவ் விழிப்புணர்வூட்டும் கருத்தரங்கானது திரு சுமித் மத்தநாயக்க மற்றும் திரு சசின் துஷ்யந்த அவர்களால் மெருகூட்டப்பட்டது.

இந் நிகழ்வில் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 21 54 56 மற்றும் 61ஆவது படைப் பிரிவுகளின் உயர் அதிகாரிகள் படையினர் போன்றோர் கலந்து கொண்டனர். இதன் போது மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகமானது போக்குவரத்து மற்றும் மதிய உணவு போன்றவற்றை வழங்கி வைத்தது. short url link | Fullress , スニーカー発売日 抽選情報 ニュースを掲載!ナイキ ジョーダン ダンク シュプリーム SUPREME 等のファッション情報を配信!