11th December 2018 13:06:50 Hours
தியதலாவ ஸ்நைப்பர் பயிற்ச்சி முகாமில் ஸ்நைப்பர் பயிற்ச்சி இலக்கம் 20 இல் 08 மாத கால பயிற்ச்சி நிறைவு பின் வெளியேறும் நிகழ்வானது (10) ஆம் திகதி திங்கட்கிழமை இடம் பெற்றது. இந் நிகழ்வில் அணிவகுப்பு மற்றும் சின்னம் வழங்கப்பட்டது.
இப் பயிற்ச்சியில் பங்களதேஷ், இந்தியா, மாலதீவு, நேபாளம் மற்றும் சிம்பாபோ போன்ற நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி வெளிநாட்டு இராணுவத்தினர் 11 பேர்களும் இலங்கை இராணுவத்தின் 3 அதிகாரிகள் மற்றும் 39 படையினர்களும், கடற்படை அதிகாரியொருவரும் 1கடற் படையினர் உட்பட 2 விஷேசட படையணியினரும் இப் பயிற்சியில் கலந்துகொண்டன.
இப் பயிற்ச்சி நிகழ்விற்கு பிரதான அதிதியாக இராணுவ போர்கருவி மாஸ்டர் ஜெனரல் மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன அவர்கள் கலந்து கொண்டு இப் பயியற்ச்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த படையினர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் சொற்பொழிவுகளையும் வழங்கினார். அதற்கமைய இந் நிகழ்வில் துப்பாக்கிச் சூடுகளின் ஒரு அற்புதமான வீடியோ காட்சியும் காண்பிக்கப்பட்டது.
இந் நிகழ்விற்கு ஸ்நைப்பர் பயிற்ச்சி முகாமின் தளபதி பிரிகேடியர் ஜி.எம். சி. கே. பி. ஏக்கநாயக்க மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர். buy shoes | Footwear