28th October 2018 11:57:01 Hours
இலங்கை இராணுவத்தினால் இரண்டாவது தடவையாக ஒழுங்கு செய்யப்பட்ட ‘Ride with Pride’ சைக்கிள் ஓட்டப் போட்டி காலி முகத்திடலில் இருந்து (28) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை ஆரம்பமானது.
இந்த நிகழ்வை ஆரம்பிப்பதற்காக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக, இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் தம்பத் பெர்ணாண்டோ அவர்கள் இவ் நிலையத்திற்கு வருகை தந்து இந்த போட்டியை ஆரம்பித்து வைத்தனர்.
இராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் சிவில் நபர்கள் 200 பேரைக் கொண்ட அங்கத்தவர்கள் இந்த போட்டிகளில் பங்கேற்றுக் கொண்டனர்.
இராணுவ விளையாட்டு பணியகத்தின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அநுர சுதசிங்க மற்றும் இராணுவ சைக்கிள் சங்கத்தின் தலைவர் பிரகேடியர் துமிந்த நிரிநாக அவர்களது பூரண தலைமையில் இந்த நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.
இந்த சவாரிகள் கொழும்பு காலி வீதியின் ஊடாக கொல்லுபிட்டி, ஆர் டி மெல் மாவத்தை, மொரடுவ, பாணந்துறை, வலான சந்தியினூடாக மீண்டும் கடுபெத்த, இராணுவ மின்சார பொறியியலாளர் வேலை நிலையத்திற்கு அருகாமையில் முடிவுற்றது.best shoes | 【国内4月24日発売予定】ナイキ ウィメンズ エア アクア リフト 全2色 - スニーカーウォーズ