06th August 2018 14:51:47 Hours
புதிதாக படையினருக்கான தங்குமிட வசதிக்கான புதிய கட்டிட திறப்பு விழா வெஹரயில் அமைந்துள்ள இலங்கை தேசிய பாதுகாப்பு படையணி தலைமையகத்தில் (3) ஆம் திகதி வெள்ளிக் கிழமை இடம்பெற்றது. இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக இராணுவ தொண்டர் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பியல் விக்ரமரத்ன அவர்கள் தேசிய பாதுகாப்பு படையணியின் படைத் தளபதியின் அழைப்பையேற்று வருகை தந்து ரிபன்களை வெட்டி இந்த புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார்.
இராணுவத் தலைமையகம் மற்றும் அனைத்து தேசிய பாதுகாப்பு படையினர்களால் சேகரிக்கப்பட்ட நிதிகளின் மூலம் இந்த கட்டிடங்கள் நிர்மாணிக்கப்பட்டன. இவைகள் அனைத்தும் தேசிய பாதுகாப்பு படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் நிஷ்சங்க ரணவன அவர்களது ஏற்பாட்டில் இடம்பெற்றன.
இந்த நிகழ்விற்கு பிரிகேடியர் எஸ்.பீ கொஹன, இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர். jordan Sneakers | New Releases Nike