06th July 2018 15:38:06 Hours
பாதுகாப்பு சேவை 2018 ஆம் ஆண்டிற்கான கிரிக்கட் சம்பியன்சிப் போட்டியில் இலங்கை இராணுவ மகளீர் படையணி கலந்து வெற்றியை சுவீகரித்து கொண்டது.
இந்த போட்டிகள் மே மாதம் 3 ஆம் திகதி தொடக்கம் ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரை இடம்பெற்றன. இறுதி சுற்றுப் போட்டிகள் இலங்கை விமானப்படை மற்றும் இராணுவ மகளீர் கிரிக்கட் அணியினருக்கு இடையில் இடம்பெற்றன.
இலங்கை விமானப்படை கிரிக்கட் அணியானது 151 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இராணுவ கிரிக்கட் அணியானது 7 விக்கட்டுகளை இழந்து 256 ஓட்டங்களை பெற்று வெற்றியை சுவீகரித்துக் கொண்டது. இராணுவ கிரிக்கட் அணியின் போர் வீராங்கனை டீ.எம்.எஸ்.எம் குமாரி மற்றும் போர் வீராங்கனை எச்.ஐ.எஸ் மென்டிஸ் அவர்கள் சிறந்த விளையாட்டு வீராங்கனைகளாக தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த இறுதி சுற்றுப் போட்டிக்கு பிரதம அதிதியாக பிரதி பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன அவர்கள் வருகை தந்து வீராங்கனைகளுக்கு சான்றிதழ் மற்றும் வெற்றிக் கிண்ணங்களை வழங்கி வைத்தார்.
இலங்கை கடற்படையின் வெலிசர மைதானத்தில் இந்த போட்டிகள் இடம்பெற்றன.
Best Authentic Sneakers | Nike, adidas, Converse & More