10th June 2018 21:17:26 Hours
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 23 ஆவது படைப் பிரிவிற்குரிய 11 ஆவது இலங்கை பீரங்கிப் படையணியினால் ஒழுங்கு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வு ஏறாவூரில் உள்ள அலிஹார் தேசிய பாடசாலையில் (6) ஆம் திகதி மாலை வெள்ளிக் கிழமை இடம்பெற்றன.
இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக 23 ஆவது படைத் தளபதி பிரிகேடியர் சூல அபேநாயக அவர்கள் வருகை தந்தார்.
இனங்களுக்கிடையே சமாதானத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் இராணுவத்தினரால் இந்த இப்தார் நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.
இந்த இப்தார் நிகழ்வுகள் முஸ்லீம் மதத்தைச் சேர்ந்த மௌவிகளின் பங்களிப்புடன் இப் பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லீம் பிரதேச வாசிகளுடன் அனைத்து சமய மத தலைவர்களது பங்களிப்புடன் இடம்பெற்றது.
மேலும் இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் திரு. எம் உதய குமார், இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் படையினர், மட்டக்களப்பு பிரதி பொலிஸ் மா அதிபர் உட்பட 200 அங்கத்தவர்களின் பங்களிப்புடன் சிறப்பாக இடம்பெற்றன.
Sport media | Nike Shoes