07th June 2018 12:41:23 Hours
உலக சூழல் தினத்தை முன்னிட்டு மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருக்மள் டயஸ் அவர்களது பணிப்புரைக்கமைய இராணுவத்தினரால் ஒழுங்கு செய்யப்பட்ட சுற்றாடல் தின ஊர்வல நிகழ்வு 05 ஆம் திகதி ஜீன் மாதம் ஹல்துமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்றன.
இந்த நிகழ்வில் ஒரு அதிகாரி உட்பட 25 படை வீரர்கள் கலந்துகொண்டனர். அத்துடன் இந்த சுற்றாடல் தின அணி ஊர்வலத்தில் பாடசாலை மாணவர்கள், அரச உத்தியோகத்தர்கள் மற்றும் அப்பிரதேசத்தைச் சேர்ந்த பிரதேச வாசிகள் இணைந்திருந்தனர்.
ஹால்துமுல்ல பிரதேசத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான பொதுவான பொது எச்சரிக்கை மற்றும் கழிவுகள் சரியான முறையில் அகற்றுவது மற்றும் இயற்கையைப் பாதுகாப்பதற்காக பயன்படுத்தக்கூடிய நடவடிக்கைகள் ஆகியவையே இந்த திட்டத்தின் ஊடாக தெளிவூட்டப்பட்டன.
இது பொதுமக்கள் மற்றும் இராணுவத்தினருக்கு இடையில் நல்லெண்ண உறவை மேம்படுத்தும் நோக்கமாக அமைகின்றது.
Best Nike Sneakers | Women's Nike Air Max 270 trainers - Latest Releases