01st June 2018 17:25:17 Hours
கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சன்துசித்த பனான்வல உட்பட பல சிரேஷ்ட அதிகாரிகளுடன் தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் நிமித்தம் (30) ஆம் திகதி புதன் கிழமை கல்முணை மற்றும் அக்கரைப்பற்று பிரதேசத்தில் அமைந்துள்ள படைப் பரிவுக்கு விஜயத்தை மேற்கொண்டார்.
இந்த விஜயத்தின் போது 242 ஆவது படைப் பிரிவுக்கு வருகை தந்த கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி படையினர்களிடம் கலந்துரையாடும் போது இப் பிரதேசத்தில் நல்லினக்க முக்கியத்துவம் இராணுவ தளபதிகளின் திறனை அடிப்படையாகக் கொண்ட ஒரு தொழில்முறை இராணுவத்தை உருவாக்க கடுமையான ஒழுக்கம் மற்றும் பயிற்சிக்கான தேவையை பற்றியும் அவர்கள் தெரிவத்தனர்.
இதன் பின்னர் கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி 24 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த முதலிஹே கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பிரிகேடியர் பிரதான பிரதாணி பிரிகேடியர் ஏ.எஸ் ஹேவா வித்தாரன மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளும் கல்முனை சுபோதாராம விகாரையின் பூஜை வழ்பாடுகளுடன் கலந்து கொண்டு விகாரையின் பௌத்த தலைவருடனும் சந்தித்து கலந்துரையாடினார்.
இந் விகாரையை வழிப்பாடுகளின் பின் சென்கமுவ மற்றும் கன்ஜனா போன் பிரதேசத்தில் அமைந்திருக்கும் 23 ஆவது இலங்கை இராணுவ சிங்க படையணி மற்றும் 8 ஆவது இலங்கை இராணுவ தேசிய பாதுகாப்பு டையணிக்கும் விஜயத்தை மேற் கொண்டார்.
இறுதி நாள் கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சன்துசித்த பனான்வல அவர்கள் அக்கரைப்பற்று பிரதேசத்தில் அமைந்துள்ள முஸ்லிம் பள்ளிக்கு வருகை தந்து இப்தார் நிகழ்வில் பிரதான அதிதியாக கலந்து கொண்டார்.
நல்லிணக்க இன உறவுகளை மேம்படுத்துவதற்கான நோக்கத்துடன் கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதியுடன் அனைத்து சிரேஷ்ட அதிகாரிகள் கிழக்கு மாகாணத்தின் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் உள்ள அனைத்து முஸ்லிம் அதிகாரிகளும் இந்த நிகழ்வில் இணைந்தனர். இந்நிகழ்வின் முடிவில் முஸ்லிம் சமுதாயத்திற்கு நன்றி தெரிவித்தனர்.
மேலும் அக்கரைப்பற்று முஸ்லிம் பள்ளியின் தலைவர் இராணுவத்திற்கு சிறப்பு பூஜை வழங்கிதுடன் தாய்நாட்டிற்கு தங்களது உயிரை தியாகம் செய்த யுத்த வீரர்களுக்கு நன்றி தெரிவித்தார். பாதுகாப்புப் படையின் தலைமையகத்தின் Nகர்னல் கட்டளை தளபதிகளும் இந்த சுற்றுப்பயணத்தில் கலந்து கொண்டனர்.
Best Authentic Sneakers | Gifts for Runners