23rd April 2018 20:06:51 Hours
மலர்ந்த புத்தாண்டை முன்னிட்டு பொறியியலாளர் படைப்பிரிவின் படையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட புத்தாண்டு நிகழ்வானது கடந்த (20) ஆம் திகதி பொறியியலாளர் அதிகாரிகள் மற்றும் படையினரின் ஒத்துழைப்போடு வவுனியா பூஓயாவில் அமைந்திருக்கும் பொறியியலாளர் படையணி தலைமையகத்தில் இடம் பெற்றது. இந் நிகழ்வானது 1, 7, 8, 9, 10 மற்றும் 11 ஆவது பொறியியலாளர் படையணியினரின் பங்களிப்புடன் சம்பிரதாய வினோத விளையாட்டு போட்களும் இடம் பெற்றன.
பூஓயாவில் இடம் பெற்ற இந் நிகழ்வில் பிரதான அதிதியாக இலங்கை இராணுவ பொறியியலாளர் படைப்பரிவின் கட்டளை அதிகாரி மற்றும் யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி கலந்து கொண்டார்.
பொறியியலாளர் படைப்பரிவின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் அமித் செனவிரத்ன அவர்களை வரவேற்றதுடன் வரவேற்பு நடனத்துடன் அழைத்து செல்லப்பட்டார். அவர்களுடன் 65 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமார பீரிஸ் மற்றும் பொறியியலாளர் படைப்பரிவின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் எஸ்.டி.பி திஸாநாயக அவர்களும் இணைந்து சென்றனர்.
ஆதனைத் தொடர்ந்து இப் படைத் தளபதியவர்களினால் தேசிய கொடியேற்றி அதனைத் தொடர்ந்து தேசிய கீதமும் பாடப்பட்டது.
இப் புத்தாண்டு நிகழ்வில் மரதன் ஓட்டப் போட்டி மற்றும் ரபான் வாசித்தல் ஓலைப் பின்னுதல், பனிஸ் சாப்பிடுதல், யானைக்கு கண் வைத்தல், 12 வயதுக்கு கீழ் அலகுராணி தேர்ந்தெடுக்கும் போட்டி, வலுக்கு மரம் ஏறுதல், கொட்டா போரய, பெண்களுக்கான கயறு இழுத்தல், விநோத உடைப் போட்டிகள், பெலுன் ஊதுதல், போன்ற சம்பிரதாய வினோத விளையாட்டு போட்களில் இராணுவத்திரும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.
இந்; நிகழ்வில் கவர்ச்சிகரமான கிராமம் அமைக்கப்பட்டுருந்தது அத்துடன் கிராமப்புற மக்களின் பாரம்பரிய இனிப்புகளுடன் தேநீர் விருந்துபசாரத்தில் அதிகாரிகள் மற்றும் படையினர் உட்பட அவர்களின் குடும்பத்தினரும் கலந்து கொண்டார்கள் .
பிரதான அதிதி உட்பட அனைத்து படையதிகாரிகளும் படையினரும், படையினர்களின் குடும்பத்தினர்களுக்கிடையே நட்புறவை ஏற்படுத்தும் நோக்குடம் இடம் பெற்ற இப் போட்டிகளில் வெற்றிப் பெற்ற சிரேஷ்ட அதிகாரிகளும் அவர்களின் துணைவியார் மற்றும் படைப்பரிவின் ஆணைச்சீட்டு அதிகாரிகும் பரிசுகள் வழங்கப்பட்டனர். இலங்கை இராணுவ பொறியியலாளர் படைப்பரிவின் கட்டளை அதிகாரியவர்களால் மரதன் ஓட்டத்தில் வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டனர்.
இந் நிகழ்வு முடிவின் பூஓயா படைத் தலைமையக வளாகத்தில் சங்கீத இசை நிகழ்வும் இடம் பெற்றனர்.
Running Sneakers | Nike