23rd April 2018 20:35:00 Hours
681 ஆவது படைத் தலைமையகத்தினால் முள்ளிவாய்க்காலில் அமைந்துள்ள ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் நன்கொடையாக (19) ஆம் திகதி வியாழக் கிழமை வழங்கப்பட்டன.
இருபது பாலர் பாடசாலை மாணவர்களுக்கு இந்த பாடசாலை பொருட்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.
இந்த அன்பளிப்புகள் 681 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரியான கேர்ணல் டீ.எம்.பி.டீ திசாநாயக அவர்களினால் வழங்கப்பட்டன.
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு அவர்களது எண்ணக்கருவிற்கமைய 68 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியான மேஜர் ஜெனரல் ரசிக பெர்ணாந்து அவர்களது வழிக்காட்டலின் கீழ் 14 ஆவது விஜயபாகு காலாட் படையணி மற்றும் 9 ஆவது தேசிய பாதுகாப்பு படையணி இணைந்து இந்த பாலர் பாடசாலையின் கட்டிட நிர்மானங்களை அமைத்தனர்.
இந்த கட்டிட நிர்மானங்களுக்காக 330,000 ரூபாய் 681 ஆவது படைத் தலைமையகத்தின் அனுசரனையுடன் வழங்கப்பட்டுள்ளன.
இந்த நிகழ்விற்கு 681 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி கேர்ணல் டீ.எம்.பி.டீ திசாநாயக அவர்கள் பிரதம அதிதியாக வருகை தந்தார்.
jordan release date | Nike