Header

Sri Lanka Army

Defender of the Nation

17th April 2018 14:44:57 Hours

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் இரண்டாவது தடவையாக சுற்றுலா பயணம்

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தினர் இரண்டாவது தடவையாக சுற்றுலா பயணத்தை மேற் கொண்டனர். இப் படைத் தலைமையகத்தில் சேவை செய்யும் இராணுவத்தனரின் குடும்பத்தினர்களை அனுராதபுரம், மிகிந்தலை, தந்திரிமலை மடு மற்றும் வெலிஓயா போன்ற புணித தளங்களுக்கு அழைத்துசென்றனர்.

இந்த முன்று நாள் சுற்றுலாவானது (ஏப்ரல் 6ஆம் திகதி தொடக்கம் 8ஆம் திகதி வரை) வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் சேவை புரியும் ஆணைச் சீட்டு அதிகாரிகள் படையினர்கள் மற்றும் சிவில் ஊழியர்களின் 29 குடும்பத்தில் 133 பேர்கள் கலந்து கொண்டார்கள்.

இந்த சுற்றுலாவில் கலந்து கொண்டவர்களுக்கு உணவு, தங்கும்மிட வசதி, வாகன வசதிகள் அனைத்துக்கும் தேவையான இலவச வசதிகள், வைத்திய சேவைகளையும் இலவசமாக வழங்கினர்.

இந் சுற்றுலாவில் சம்பிரதாய முறைப்படி அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டதோடு பயணிக்கும் முன் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு வருகை தந்த அனைத்து இராணுவத்தினர் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்களை ஊர்வலத்துடன் அழைத்து வரப்பட்டதுடன் இவர்களுக்கு ஆசர்வாதமும் வழங்கப்பட்டது.

மூன்று நாள் சுற்றுலாவில் பயணத்தை மேற் கொண்ட அவர்கள் வன்னி பாதுகாப்பு தலைமையகத்திற்கு வருகை தந்த பின் வீட்டுக்கு செல்வதற்கு முன் இவர்களுக்கு இரவு உணவும் இன் இசை நிகழ்ச்சியும் வழங்கப்பட்டது. அதன் பின் பாடசாலை மாணவர்களுக்கு நன் கொடைகளும் வழங்கப்பட்டது.

இந் நிகழ்வுகளில் வன்னிய பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளுடன் கலந்து கொண்டனர்.

Sports brands | Nike Shoes