Header

Sri Lanka Army

Defender of the Nation

02nd April 2018 18:56:23 Hours

குறைந்த வருமானத்தை பெறும் குடும்பத்தினருக்கு தையல் இயந்திரங்கள்

யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி அவர்களது வழிக் காட்டலின் கீழ் அனுசரனையாளர்களான மோகன் சங்கர் மற்றும் திருமதி வதனி சங்கர் அவர்களது உதவியுடன் யாழ்ப்பாணத்தில் குறைந்த வருமானத்தை பெறும் குடும்பத்தினருக்கு இந்த தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வு (28) ஆம் திகதி புதன் கிழமை யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக கேட்போர் கூடத்தில் 7 ஆவது இராணுவ மகளீர் படையணியின் முழுமையான ஏற்பாட்டுடன் இடம்பெற்றன.

புணர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் 15 பேருக்கு சுய வேலை வாய்ப்பை பயண்படுத்தி அவர்களது வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்த தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக யாழ் பாதுகாப்பு படைத் தளபதி வருகை தந்து இன மற்றும் மத நல்லிணக்கத்தை மீளமைப்பதன் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தினார்.

யாழ் குடா நாட்டில் தமிழ் சமூகத்தை ஆதரிப்பதற்காக இராணுவப் படைகளின் முயற்சிகளைப் பற்றி அவர் முதலில் பேசினார். பின்பு முன்னாள் போராளிகளை உள்ளடக்கிய அவர்களது வாழ்க்கைத் தரங்களை மேம்படுத்துவதற்காகவும். இந்நிகழ்வில் உரையாற்றிய திரு ஷங்கர், இந்த பெருந்தன்மையினையிட்டு மகிழ்ச்சியடைந்ததாகவும், தமிழ் சமூகத்தினருக்கு இராணுவத்தினரது ஒத்துழைப்பையிட்டு நன்றியையும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் யாழ் பாதுகாப்பு படைத் தளபதி , மற்றும் அனுசரனையாளர்களான மோகன் சங்கர், திருமதி வதினி சங்கர், இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள், குடும்ப அங்கத்தவர்கள் மற்றும் படையினரும் கலந்து கொண்டனர்.

latest jordan Sneakers | Sneakers