01st April 2018 22:16:57 Hours
பாதுகாப்பு சேவை ரக்பி இறுதிச் சுற்றுப் போட்டிகள் (27) ஆம் திகதி செவ்வாய்க் கிழமை ரத்மலான விமானப்படை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றன.
இந்த இறுதிச் சுற்றிப் போட்டிகள் கடற்படை மற்றும் இராணுவத்தினருக்கு இடையில் இடம்பெற்ற இடையில் இலங்கை இராணுவ ரக்பி அணி வெற்றியை சுவீகரித்துக் கொண்டுள்ளது.
இந்த இரு அணிகளுக்கு இடையில் மிக சுறுசுறுப்புடன் இந்த போட்டிகள் இடம்பெற்றன. அச் சமயத்தில் இலங்கை இராணுவ அணி மிகவும் திறமையாக விளையாடி 28-23 என்ற ரீதியில் வெற்றியை சுவீகரித்துக் கொண்டது.
இதற்கிடையில் பெண்களுக்கு இடையிலான ரக்பி போட்டியில் இலங்கை விமானப்படை மற்றும் கடற்படையை தோற்கடித்து இலங்கை இராணுவ மகளீர் படையணி வெற்றியை சுவீகரித்துக் கொண்டது.
பாதுகாப்புச் சேவைகளின் 2018 ஆம் ஆண்டிற்கான ரக்பி போட்டிகளில் இராணுவ ரக்பி அணியினர் விமானப்படை மற்றும் கடற்படையை தோற்கடித்து 29-21 என்ற ரீதியல் வெற்றியை சுவீகரித்துக் கொண்டனர்.
இந்த இறுதி சுற்றுப் போட்டிக்கு பிரதம அதிதியாக இராணுவ ரக்பி கழகத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் சத்யபிரிய லியனகே அவர்கள் வருகை தந்து வெற்றியாளர்களுக்கு பரிசினையும் வழங்கி வைத்தார்.
மேலும் இந்த நிகழ்வில் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.
Authentic Nike Sneakers | Nike Air Force 1 , Sneakers , Ietp STORE