01st March 2018 07:59:13 Hours
முல்லைத் தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 59 ஆவது படைப் பிரிவிற்கு உட்பட்ட முல்லைத் தீவு நாயாறு பிரதேசத்தில் உள்ள 593 ஆவது படைப்பிரிவிற்கு புதிய படைத் தளபதியாக கேர்ணல் ஏ.எச்.எல்.ஜீ அமரபால அவர்கள் (26) ஆம் திகதி திங்கட் கிழமை உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றார்.
593 ஆவது படைப் பிரிவிற்கு வருகை தந்த படைத் தளபதியை 19 ஆவது கெமுணு ஹேவா படையணியைச் சேர்ந்த படையினர் இராணுவ மரியாதையுடன் வரவேற்றனர்.
அதனை தொடர்ந்து மஹா சங்க பௌத்த தேரரின் சமய ஆசிர்வாத நிகழ்வை தொடர்ந்து புதிய இராணுவ தளபதி உத்தியோகபூர்வ ஆவணங்களில் கையெழுத்திட்டு தனது கடமையை பொறுப்பேற்றார். அதன் பின்னர் இராணுவ தலைமையகத்தில் பணியாற்றும் அனைத்து அதிகாரிகளுக்கும் படையினர்களுக்கும் படைத் தளபதியினால் உரைநிகழ்த்தப்பட்டது.
அதனை தொடர்ந்து தளபதியினால் தலைமையக வளாகத்தினுள் மரநடுகை நிகழ்வும் இடம் பெற்றது இந்த நிகழ்வில் 593 ஆவது படைத் தலைமையகத்தில் அனைத்து கட்டளை அதிகாரிகள் மற்றும் படையினரும் கலந்துகொண்டார்கள்.
Sportswear free shipping | Women's Designer Sneakers - Luxury Shopping