12th February 2018 14:06:40 Hours
சாலியவெவையில் அமைந்துள்ள இராணுவத் தொழிற்பயிற்சிப் பயிற்சி மையத்தின் நான்காவது கட்டளை அதிகாரியாக பிரிகேடியர் கே.ஏ.டபிள்யூ.குமாரப்பெரும அவர்கள் (8) ஆம் திகதிவியாழக்கிழமை சமய சம்பிரதாய ஆசிர்வாதத்துடன் தனது பதவியை கடமையேற்றார்.
புதிதாக நியமிக்கப்பட்ட கட்டளை அதிகாரியை பிரதான நுழைவாயிலில் வைத்து வரவேற்று பின்னர் இராணுவ மரியாதை வழங்கப்பட்டது.
கட்டளை அதிகாரி தனது பணிமனைக்கு சென்று உத்தியோகபூர்வமாக தனது பதவியை பொறுப்பேற்றார்.பின்பு மஹாசங்க தேரர் அவர்களின் பௌத்த சமய ஆசீர்வாத பிரித் நிகழ்வுகள் இடம்பெற்றன.
இறுதியில் இந்த பயிற்சி மையத்தில் உள்ள அதிகாரிகள் படை வீரர்கள் மத்தியில் கட்டளை அதிகாரி உறையை நிகழ்த்தினார்.
இந்த நிகழ்விற்கு இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் படை வீரர்கள் இணைந்திருந்தனர்.
Best Authentic Sneakers | Nike Running