03rd December 2017 20:00:26 Hours
இலங்கைக்கான பிரித்தானியஉயர் ஸ்தானிகராலயத்தின் பிரதி உயர் ஸ்தானிகர் திருமதி டாம் பர்ன்வடக்கிற்கு அண்மையில் விஜயத்தை மேற்கொள்ளும்போது, முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 64 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியான பிரிகேடியர் ஜயனாத் ஜயவீரஅவர்களை அவரது படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது இப்பிரதேசத்தில் இடம்பெறும் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் நல்லிணக்கம், இன ஒற்றுமை மேம்படுத்துவதற்காகவும்இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் விடயங்கள் மற்றும் அப்பிதேச பாதுகாப்பு தொடர்பாக கலந்தரையாடல் இடம்பெற்றது.
மேலும் இலங்கை மற்றும் இந்தியாவுக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் பாதுபாப்பு பிரிவின் குறுப் கெப்டன் பிரேசர் நிக்கல்சனும் இந்த கலந்தரையாடலில் இணைந்திருந்தார்.
இந்த கலந்துரையாடலின் இறுதியில் பிரித்தானிய உயர் ஸ்தானிகர் பிரமுகர்கள் கையொப்பமிடும் புத்தகத்திலும் கையொப்பமிட்டார். பின்பு 64 படைத் தளபதியினால் நினைவு சின்னமும்உயர் ஸ்தானிகருக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.
latest jordans | Air Jordan