Header

Sri Lanka Army

Defender of the Nation

02nd November 2017 20:43:03 Hours

இலங்கை இராணுவ தேசிய பாதுகாப்பு படையணியின் வருடாந்த நினைவு தின விழா

தேசிய பாதுகாப்பு படையணியின் 27 ஆவது ஆண்டு பூர்த்தி விழா (01) ஆம் திகதி குருணாகல் வெஹெரவத்த பிரதேசத்தில் அமைந்திருக்கும் இலங்கை இராணுவ தேசிய பாதுகாப்பு படையணியின் தலைமையகத்தில் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த படை வீரர்களை நினைவு படுத்தி இடம்பெற்றது.

இந் நிகழ்விற்கு இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பியல் விக்ரமரத்ன அவர்கள் பிரதம அதிதியாக வருகை தந்தார்.

அவரை படையணியின் பிரதிக் கட்டளை தளபதியான கேர்ணல் நலின் பண்டாரநாயக வரவேற்றார்.

இந்த நிகழ்வில் முதல் கட்டமாக நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த படை வீரர்களை நினைவு படுத்தி இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து பௌத்த சமய நிகழ்வுகள் பௌத்த தேரர்களின் பங்களிப்புடன் இடம்பெற்றதுடன் படைத் தளபதி. ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் மற்றும் படை வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் இராணுவ நினைவு துாபிகளுக்கு மலரஞ்சலி செலுத்தினார்கள்.

27 ஆவது ஆண்டு பூர்த்தி விழாவிற்கு வருகை தந்த படைத் தளபதிக்கு இராணுவ அணிவகுப்பு மரியாதைகள் வழங்கப்பட்டன.

அதனை தொடர்ந்து படைத் தளபதியினால் தலைமையக வளாகத்தினுள் மரநடுகை நிகழ்வு இடம்பெற்றது.

பின்னர் படையணியின் அனைத்து அங்கத்தவர்களுடன் புகைப்படம் எடுக்கப்பட்டது.

இந் நிகழ்வின் இறுதியில் படையணியின் அனைவரது பங்களிப்புடன் மதிய போசன விருந்து இடம்பெற்றது.

Sports Shoes | adidas Campus 80s South Park Towelie - GZ9177