18th September 2017 16:10:41 Hours
யாழ் பாதுகாப்பு தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 55ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் ஜயந்த குணரத்ன புதிய படைத் தளபதியாக கண்டைக்காட்டில் அமைந்துள்ள தலைமையகத்தில் (15)ஆம் திகதி வெள்ளிக் கிழமை உத்தியோகபூர்வமாக தனது பதவியை பொறுப்பேற்றார்.
பின்பு படைத் தளபதிக்கு தலைமையகத்தில் இராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து படைத் தளபதியினால் மரநடுகை நிகழ்வு இடம்பெற்றது. பின்பு அனைத்து மத குருமாரது ஆசிர்வாதத்துடன் சமய அனுஷ்டானங்களை நடாத்தி நல்லாசி பெற்றதன் பின்பு தனது கடமையை பொறுப்பேற்று கையொப்பமிட்டார்.
இறுதியில் படைத் தளபதியினால் தலைமையகத்தில் உள்ள இராணுவத்தினருக்கு உரை நிகழ்த்தி அதன் பின்பு படை வீரர்களினால் ஒழுங்கு செய்யப்பட்ட பிரியாவிடையில் கலந்து கொண்டார்.
Sports Shoes | Air Jordan 1 Retro High OG 'University Blue' — Ietp